ராகுல் காந்தி பிரச்சாரம் - காவல் துறை அறிவுறுத்தல்

ராகுல் காந்தி பிரச்சாரம் - காவல் துறை அறிவுறுத்தல்

பைல் படம் 

நெல்லையில் இன்று நடைபெறும் ராகுல் காந்தியின் பிரசார கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பைகள் கொண்டு வருவதை தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக இன்று (ஏப்.12) பாளையில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் பிரச்சார கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக பைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வருவதை தவிர்க்கவும் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

Tags

Next Story