ரயில் பயனாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

ரயில் பயனாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
பாவூர்சத்திரத்தில் ரயில் பயனாளர்கள் சங்கம் ஆலோசனை கூட்டம்
தென்காசி மாவட்ட ரயில் பயனாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரத்தில் தென்காசி மாவட்ட ரயில் பயனாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. இதையொட்டி ஆலோசனைக் கூட்டத்துக்கு, முன்னாள் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா தலைமை வகித்தார்.

இதில் தென்காசி மாவட்ட ரயில் பயணிகளின் நலனைப் பேணவும், மாவட்ட ரயில்வே சார்ந்த கோரிக்கைகளை முன்னெடுக்கவும், ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றவும் சங்கம் தொடங்க பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் ரயில் பயனாளர்கள் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story