காட்பாடியில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காட்பாடியில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டம்

வேலூர் மாவட்டம், காட்பாடியில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காட்பாடி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள மஸ்தூர் யூனியன் லோகோ ரன்னிங் பிரிவு அலுவலகம் முன்பு மஸ்தூர் யூனியன் லோகோ ரன்னிங் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காட்பாடி சங்க கிளை செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் சரவணன், அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ரன்னிங் லோகோ தொழிலாளர் பிரிவில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

தொழிலாளர்களை கோட்டம் மற்றும் கோட்டத்துக்கு வெளியே பணியிட மாறுதல் வழங்க வேண்டும். ரயில் என்ஜின் டிரைவர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படுவதில்லை. அவர்கள் 12 மணி நேரம் பணிபுரிகின்றனர். இதனை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story