ரயில்வே மேம்பால பணி தீவிரம்

ரயில்வே மேம்பால பணி தீவிரம்
பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணி தீவிரமாக நடப்பதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணி தீவிரமாக நடப்பதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் தென்காசியில் இருந்து நெல்லை வரை சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வழியாக பெரும்பாலான சாலை பணிகள் நிறைவு பெற்ற நிலையில் பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனால் இந்தப் பணி இரவும் பகலும் பார்க்காமல் விறுவிறுப்பாக நடைபெறுவதால் நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் வாகனங்களும் மோட்டார் சைக்கிள்களும் பாவூர்சத்திரம் அருகே மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த ரயில்வே மேம்பால பணி விறுவிறுப்பாக நடைபெறுவதால் அப்பகுதி வாகன ஓட்டிகளும், சமூக அலுவலர்களும், பொதுமக்களும் வெகுவாக மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story