பார்வதிபுரத்தில் மினி டெம்போ  மோதி ரயில்வே கேட் சேதம்

பார்வதிபுரத்தில் மினி டெம்போ  மோதி ரயில்வே கேட் சேதம்
ரயில்கேட்டில் மோதிய மினி டெம்போ
பார்வதிபுரத்தில் மினி டெம்போ  மோதி ரயில்வே கேட் சேதம் அடைந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரத்திலிருந்து ஆலம்பாறை செல்லும் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இன்று காலை சுமார் ஒன்பது மணி அளவில் நாகர்கோவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் ரயிலுக்காக பார்வதிபுரத்தில் உள்ள இந்த ரயில்வே கேட் அடைக்கப்பட்டது.

அப்போது அந்த வழியாக வந்த மினி டெம்போ ஒன்று ரயில்வே கேட் மூடுவதைப் பார்த்து, ரயில் பாதையை வேகமாக கடப்பதற்காக வேகத்தை கூட்டி ஓட்டி சென்றுள்ளார். ஆனால் கடந்து செல்ல முடியாமல் மினி டெம்போ ரெயில் கேட்டில் சிக்கியதுடன், கேட்டும் சேதமடைந்தது. பின்னர் ரயில் கேட்டை திறக்க முடியவில்லை.

பின்னர் அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் காலையில் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பல கிலோமீட்டர் சுற்றி சென்று அவதி அடைந்தனர்.

Tags

Next Story