பயணிகளுக்கு உதவும் ரயில்வே பாதுகாப்பு படை

பயணிகளுக்கு உதவும் ரயில்வே பாதுகாப்பு படை

திண்டுக்கல் ரயில் நிலையம் 

தென்மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ரயில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் வழியாக திருநெல்வேலி,நாகர்கோவில்,கன்னியாகுமரி செல்லும் ரயில்களும் 2 நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வடமாவட்டங்களிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வதற்காக வரும் பயணிகள் திண்டுக்கல்லில் இறங்கி எங்கே செல்வது என தெரியாமல் அலைமோதுகின்றனர். அவர்களுக்கு உதவி செய்ய திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தலைமையிலான போலீசார் 5 பேர் ரயில்வே ஸ்டேஷனில் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பயணிகள் அச்சமின்றி செல்கின்றனர்.

Tags

Next Story