ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு

ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு

  தர்மபுரி ரயில் நிலையத்தை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி ரயில் நிலையத்தை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி டிச 6: தர்மபுரி ரயில் நிலையத்தை மேம்படுத்த ஒன்றிய அரசு அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் 15 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தர்மபுரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி ரயில் நிலையத்தை நேரில் பார்வையிட்ட அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "தரமபுரி ரயில் நிலையத்தில் 2004 ஆம் ஆண்டு நடைமேடை அமைக்கப்பட்டது. அதற்குப் பின்பு பெரிய அளவில் நடைமேடை மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது மத்திய அரசு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 15 கோடி தருமபுரி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு ஒதுக்கி உள்ளது. மக்களவை உறுப்பினர் என்ற முறையில் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியதன் அடிப்படையில் இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் சார்ந்து நாம் முன்வைத்த அத்தனை கோரிக்கைகளையும் ஒன்றிய அரசு ஏற்று கொண்டுள்ளது. இந்த நிலையில் தர்மபுரி ரயில் நிலையத்தில் பயணிகள் நலன் கருதி பல்வேறு மேம்பாட்டு பணிகள் ரூ.15 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது. அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் தர்மபுரி ரயில் நிலையத்திற்கு அருகில் 400 இருசக்கர வாகனங்கள் மற்றும் 50 கார்கள் நிறுத்தும் அளவிற்கு கான்கிரீட் தளத்துடன் கூடிய வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட உள்ளது. உயர் வகுப்பு பயணிகள் காத்திருப்புக் கூடம், மகளிர் மற்றும் பொதுபயணிகள் காத்திருப்புக் கூடம் என மூன்று காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு நடை மேடையிலும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் இயந்திரம், நவீன கழிப்பிட வசதிகள், தானியங்கி நகரும் படிக்கட்டுகள்,‌ டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் உள்ளிட்ட வசதிகளும் இத்திட்டத்தின் கீழ் தருமபுரி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் காரணமாக தருமபுரி ரயில் நிலையம் புதுப் பொலிவு பெற்று பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார்.

Tags

Next Story