மழையால் நெற்பயிர்கள் சேதம் - எம்எல்ஏ ஆய்வு

மதுராந்தகம் அருகே தேவாத்தூர், காவாத்தூர், வீரானகுன்னம், தச்சூர் பகுதிகளில் மழையால் சேதமடைந்த நெல் வயல்களை எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நெற்பயிர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. இதனை அறிந்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் மதுராந்தகம் அடுத்த தேவாத்தூர், காவாத்தூர், வீரானகுன்னம், தச்சூர் போன்ற பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த நிலங்களை பார்வையிட்டு விவசவிகளுக்கு உரிய நிவாரண தொகை வழங்க சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் கேட்டுகொண்டனர்.. இந்நிகழ்வின் போது ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story