ஆத்தூர்: இரவில் பெய்த மழை - நிலவுது குளுகுளு சூழல்

ஆத்தூர்: இரவில் பெய்த மழை - நிலவுது குளுகுளு சூழல்

ஆத்தூரில் மழை

ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் குளுமையான சூழல் நிலவி வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது கோடை வெயில் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருவதால் பொதுமக்களின் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென கனமழை கொட்டி தீர்த்தது ஆத்தூர் நகரப் பகுதிகளான முல்லைவாடி, உடையார்பாளையம், விநாயகபுரம் மற்றும் நரசிங்கபுரம் தென்னங்குடி பாளையம், கொத்தாம்பாடி, மஞ்சினி,அப்பம்மசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு கன மழை கொட்டி தீர்த்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது

Tags

Next Story