ராசிபுரத்தில் சாரல் மழை: மக்கள் மகிழ்ச்சி

ராசிபுரத்தில் சாரல் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடந்த சில நாட்களாகவே வானம் மேகமூட்டவுடன் காணப்பட்டது. இந்நிலையில் திங்கட்கிழமை காலை முதலே லேசான சாரல் மழை பெய்தது தொடர்ந்து மாலை வேளையில் இதே போல வானம் மேகமூட்டவுடன் காணப்பட்ட நிலையில் திடீரென மீண்டும் சாரல் மழை பெய்தது இதனால் ராசிபுரம் பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் இந்த சாரல் மழை அதிக நேரம் பெய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story