மாநகரப் பேருந்திற்குள் மழை

மாநகரப் பேருந்திற்குள் மழை
மாநகரப் பேருந்தில் கொட்டிய மழைநீர்
செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்திற்கு சென்ற மாநகரப் பேருந்திற்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் அவதியடைந்தனர்.
செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், ஒரு வாரமாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு துவங்கிய மழை, இரவு 8:00 மணி வரை, பல்வேறு பகுதிகளில் விடாது பெய்தது. அப்போது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற தடம் எண்: எம் 500 மாநகர பேருந்தின் ஜன்னல் பக்கத்தின் மேற்பகுதியில், மழைநீர் உள்ளே ஒழுகியது. இதனால், பயணியர் நனைந்தபடியே தாம்பரம் வரை பயணம் செய்தனர்.

Tags

Next Story