சர்வீஸ் சாலையில் மழை நீர்: போக்குவரத்து பாதிப்பு

சர்வீஸ் சாலையில் மழை நீர்: போக்குவரத்து பாதிப்பு

சாலையில் ஓடும் மழைநீர்


குமாரபாளையம் அருகே சர்வீஸ் சாலையில் பெருக்கெடுக்கும் மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கத்தேரி புறவழிச்சாலை பஸ் நிறுத்தம் அருகே மேம்பால பணிகள் நடந்து வருகிறது. சர்வீஸ் சாலை அருகே விவசாய நிலங்கள் உள்ளன. மிகவும் தாழ்வாக இருப்பதால், பல நாட்கள் பெய்த மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இது நாளாக, நாளாக அதிகரித்து, தற்போது, சர்வீஸ் சாலையில் வழிந்தோடி வருகிறது. இந்த சாலையில் ஓரமாகத்தான், மேம்பால பக்கவாட்டு சுவர் அமைக்க அஸ்திவாரம் போடப்பட்டு வருகிறது.

மேலும் சத்யா நகர், வேமன்காட்டுவலசு. தட்டான்குட்டை உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் இவ்வழியாகத்தான் சென்று வருகிறார்கள். சில நாட்களில், புறவழிச்சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தும் இந்த சர்வீஸ் சாலை வழியாகத்தான் திருப்பி விட உள்ளனர். இப்போதே பொக்லின், ஹிட்டாச்சி போன்ற வாகனங்கள் இந்த சாலையில் பணிகள் மேற்கொள்வதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

தற்போது இந்த தண்ணீர் கசிவால் பெரும் போக்குவரத்து இடையூறு ஏற்படும் நிலை உருவாக உள்ளது. இந்த நீரை மோட்டார் வைத்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story