கால்வாய் வசதியின்றி சாலையில் தேங்கிய மழை நீர் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கால்வாய் வசதியின்றி சாலையில் தேங்கிய மழை நீர் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தேங்கிய மழை நீர்

ஆத்தங்குடியில் கால்வாய் வசதியின்றி மழைநீர் சாலையில் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

காரைக்குடி அருகே ஆத்தங்குடியில் ரோட்டில் கால்வாய் வசதியின்றி சிறு மழைக்கு கூட மழை நீர் குளம் போல் ரோட்டில் தேங்கி கிடக்கின்றன. கல்லல் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்தங்குடி சுற்றுலா தலமாகும். மேலும், பிரசித்தி பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ் உற்பத்தி இங்கு அதிகம் நடக்கிறது. சுற்றுலா பயணிகள் வரத்து உள்ளதால், ரோடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும்.

ஆனால், இங்குள்ள முத்துலோகநாயகி அம்மன் கோயில் செல்லும் ரோடு முற்றிலும் சிதிலமடைந்து கிடக்கிறது. தற்போது பெய்து வரும் மழைக்கு மழை நீர் செல்ல கால்வாய் வசதியின்றி, ரோடுகளில் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இந்த ரோடுகளில் மழை நீர் தேங்காத வகையில் புதுப்பித்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story