மேம்பாலத்தில் குளம் போல் தேங்கிய மழை நீர் - வாகன ஓட்டிகள் அவதி

மேம்பாலத்தில் குளம் போல் தேங்கிய மழை நீர் - வாகன ஓட்டிகள் அவதி

தேங்கி நின்ற மழைநீர் 

கோவை பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் மழை நீர் குளம் போல தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு மத்தியில் வாகனங்களை இயக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட மேம்பாலத்தில் குளம் போல் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.சில மாதங்களுக்கு முன்பு பெரியநாயக்கன்பாளையத்தில் 115 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் திறக்கப்பட்டது.நேற்று இரவு பெய்த மழையால் தண்ணீர் குளம் போல் பாலத்தின் மேல் தேங்கி நின்றது.இதனால் மேம்பாலத்தின் மீது சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். மேம்பாலத்தில் தேங்கிய நீர் உடனடியாக வடியும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story