குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், மிக கனமழை பெய்ததால், தெருக்கள் மற்றும் கால்வாய்களிலும், மழைநீர் சூழ்ந்தது.

வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், மிக கனமழை பெய்ததால், தெருக்கள் மற்றும் கால்வாய்களிலும், மழைநீர் சூழ்ந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், மிக கனமழை பெய்தால், தெருக்கள் மற்றும் கால்வாய்களிலும், மழைநீர் சூழ்ந்தது. இதையடுத்து, வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு, குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சில தாழ்வான பகுதிகளில், வெள்ளம் புகாமல் இருக்க முன் எச்சரிக்கையாக மண் மூட்டை தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாலாஜாபாத் பேரூராட்சி செயலர் லோகநாதன் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, மழை நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டார்.

Tags

Next Story