சூறாவளி காற்றுடன் மழை - மின்கம்பம் உடைந்ததால் இருளில் மூழ்கிய கிராமம்

போச்சம்பள்ளி அருகே அகரம் கிராமத்தில் காற்றுடன் பெய்த மழையில் மின் கம்பம் உடைந்ததால் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டு மக்கள் அவதியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையிலும் போச்சம்பள்ளி, அகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சாரல் மழை பெய்தது. மேலும் சூறாவளிக்காற்றுக்கு அகரம் பகுதியில் உள்ள மின் கம்பம் முறிந்து விழுந்தது. மேலும், அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் முறிந்து விழுந்தது. மின்கம்பம் உடைந்ததால் சுற்றுவட்டார கிராம பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால்இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர். தொடர்ந்து உடைந்த மின் கம்பம் சரிசெய்யப்பட்டு, மின்விநியோகம் செய்யும் பணியில் மின்சாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story