அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை

அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை

மழை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
அறந்தாங்கி, மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காரக்கோட்டை, இடையாத்திமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மிகப் பலத்த மழை பெய்தது. நேற்று இரவு முதல் அறந்தாங்கி மற்றும் மணமேல்குடி பகுதியில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story