வெளுத்து வாங்கும் கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்!

வெளுத்து வாங்கும் கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்!

மழை 

கோவில்பட்டியில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், மே 20 முதல் 23 வரை தென்மாவட்டங்களில் இடிமின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கோவில்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Tags

Next Story