இரண்டு மணி நேர கன மழை

இரண்டு மணி நேர கன மழை

மழை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இரண்டு மணி நேர கன மழை பெய்தது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று காலை முதல், வெயில் இல்லாமல் மேக மூட்டமாக இருந்தது. வெப்பம் இல்லாமல் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். மாலை 06:00 மணியளவில் திடீரென்று பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.

இந்த மழை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் மழை நீர் சாலையில் மற்றும் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கோம்பு பள்ளத்தில் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் அளவு 64. 60 மில்லி மீட்டர்.

மழையின் காரணமாக சாலையோரமாக இரவு நேரம் செயல்படும் இட்லி கடை சில்லி கடைகள் மீன் சில்லி கடைகள் பானிபூரி உள்ளிட்ட தள்ளுவண்டிக் கடைகள் வியாபாரம் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story