சிங்கம்புணரியில் பரவலான மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

சிங்கம்புணரியில் பரவலான மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
மழை
சிங்கம்புணரி பகுதியில் பரவலான மழை பெய்து வரும் நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக மேகமூட்டங்களாக காணப்பட்ட நிலையில் சிங்கம்புணரி மற்றும் சுற்று வட்டார பகுதியில் ஒரு மணி நேரமாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்தக் கோடை மழையை எதிர்பாராத பாதசாரிகள் ஆங்காங்கே மறைவான பகுதியில் நீண்ட நேரமாக காத்திருந்தனர். எனினும் கோடை மழையால் விவசாயத்திற்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தார்.

Tags

Next Story