ஊருக்குள் புகுந்த மழை நீர்

ராமநாதபுரம், கஞ்சம்பட்டி ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, சாயல்குடி பேரூராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வழிந்தோடியது.
ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி பகுதியில் விவசாய நிலங்களை பெருமளவில் சேதப்படுத்தியது. இந்த நிலையில், கஞ்சம்பட்டி ஓடையில் இருந்து காட்டாற்று வெள்ளமாக வரும் மழை நீர் தொடர்ந்து சாயல்குடி பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் மற்றும் ஈசிஆர் சாலையில் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ளத்தில் சாயல்குடி தீயணைப்பு நிலையம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ள இடங்களில் பெருமளவில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக அண்ணாநகர் குடியிருப்பில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியதால், அந்த பகுதியிலிருந்து பொதுமக்கள் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடத்திற்கு செல்கின்றனர். இதனிடையே அண்ணா நகருக்கு வரும் மழை நீரை திசை திருப்பி விட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என நேற்று இரவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை வருவாய் துறை அதிகாரிகள் இந்த பகுதிக்கு வந்து மீட்பு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

Tags

Next Story