ஒரு மாதமாக சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் : பொதுமக்கள் அவதி.

ஒரு மாதமாக சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் : பொதுமக்கள் அவதி.

சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர் 

முஞ்சிறையில் ஒரு மாதமாக பெய்து வரும் மழையால் மங்காடு - முஞ்சிறை சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட முஞ்சிறை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி தாமிரபரணியாறு ஆற்றின் கரையோர பகுதியில் அமைந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் வீடுகளிலும் விளைநிலங்களிலும் தண்ணீர் புகுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் தொடர் மழையினால் மங்காடு - முஞ்சிறை ரோடு தண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறது. இந்த ரோட்டில் கோனார் கோவில், சாத்திரவிளை உட்பட பல்வேறு குக் கிராமங்கள் உள்ளது இந்த கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த வீடுகளில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

Tags

Next Story