ராஜா ராணி நினைவு சின்னங்கள் புனரமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ராஜா ராணி நினைவு சின்னங்கள் புனரமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தேசிங்கு ராஜா மற்றும் ராணி பாய் நினைவிடம் 

ராணிப்பேட்டை பாலாறு நதிக்கரையோரம் உள்ள தேசிங்கு ராஜா மற்றும் ராணி பாய் நினைவுச் சின்னங்களை புனரமைக்க முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ராணிப்பேட்டை மாவட்டம் பாலாறு நதிக்கரையில் உள்ள தேசிங்கு ராஜா மற்றும் ராணி பாய் நினைவு சின்னங்கள் ரூ.2½ கோடியிலும், பாலாறு அணைக்கட்டில் ரூ.200.66 கோடியிலும் புனரமைப்பு மற்றும் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மு.வரதராசனாருக்கு ரூ.65.77 லட்சத்தில் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.அவரின் பிறந்தநாளான ஏப்ரல் 25-ந் தேதி ஆண்டு தோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Tags

Next Story