ராஜபாளையம் : அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை

ராஜபாளையம் அருகே அனுமன் ஜெயந்தியை முன்னிட்டுகல்லனை ஸ்ரீ ராம பத்த ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வெற்றிலை மாலை, வெண்ணெய் காணிக்கை தந்து தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்பம் இராஜபாளையம் அருகே சாஸ்தா அருவி செல்லும் சாலையில் கல்லனை ஸ்ரீ ராம பத்த ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. கல்லனை ஸ்ரீ ராம பத்த ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள அனுமன் சன்நிதியில் கடந்த மூன்று நாட்களாக அனுமனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்நிலையில் அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு அனுமனுக்கு வடை மற்றும் வெற்றிலை மாலை சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து 12 மணி அளவில் பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் அதனைத் தொடர்ந்து பிற்பகல் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் அனுமனுக்கு வெத்தலை மாலை வெண்ணை ஆகியவற்றை காணிக்கையாக வழங்கி தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags

Next Story