மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா : தஞ்சை மாவட்டத்துக்கு இன்று விடுமுறை

மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா :  தஞ்சை மாவட்டத்துக்கு இன்று விடுமுறை

தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப்

மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாமன்னன் ராஜராஜ சோழன் ஜப்பசி மாதத்தில் சதய நட்சத்திரம் வரும் நாளில் பிறந்ததையடுத்து அவரது பிறந்த நாள் சதய விழாவாக கொண்டாடப் பட்டு வருகிறது. இந்தாண்டு 1038 ஆவது ஆண்டு சதய திருநாள் இன்று 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று 25ம் தேதி ஒரு நாள் மட்டும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படு கிறது. இந்த உள்ளூர் விடுமுறை, செலவாணி முறிச் சட்டம் 1881ன் கீழ் வராது என்பதால் கருவூலம், மாவட்டத்திலுள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணிகளுடன் இயங்கும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Tags

Next Story