சிவகாசியில் இரங்கல் தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி....

சிவகாசியில் இரங்கல் தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி....
இரங்கல் தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி
சிவகாசியில் அதிமுக பிரமுகரின் தாயாரின் மறைவுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி முன்னாள் மாவட்ட செயலாளர் ராமசாமி மனைவியும்,விருதுநகர் மேற்கு மாவட்ட மகளீரணி செயலாளருமான R.சுபாஷினியின் தாயார் லலிதாபாரதி இன்று உடல்நல குறைவால் இயற்கை எய்தினார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சுபாஷினியின் இல்லத்திற்கு சென்று அவரது தாயாரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், தாயாரை இழந்து வாடும் R.சுபாஷினிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

Tags

Next Story