தலைகவசம் அணிவதை வலியுறுத்தி பேரணி!

கோவையில் குடியரசு தினத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி பேரணி நடந்தது.

கோவை: 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு 100பைக்கில் தலைகவசம் அணிவதை வலியுறுத்தியும் நாட்டுபற்றையும் குடியரசு தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக 100 இளைஞர்கள் கோவை ராமநாதபுரத்தில் இருந்து கந்தேகவுண்டன் சாவடியில் அருகில் உள்ள தேச பக்தி கோட்டை வரை ஊர்வலமாக சென்றடைந்து கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தினத்தை சிறப்பித்தனர்.

இந்த இருசக்கர வாகன அணிவகுப்பை கர்னல் தினேஷ் சிங் தர்வார் கொடி அசைத்து தொடங்கி வைத்து சிறப்பித்தார். இவ்விழாவில் வேதவிசாகன்,நந்தகுமார், கண்ணன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story