நாளை ரமலான் பண்டிகை: மாவட்ட அரசு ஹாஜி அறிவிப்பு

நாளை ரமலான் பண்டிகை: மாவட்ட அரசு ஹாஜி அறிவிப்பு

ரமலான் தொழுகை 

திருச்சி மற்றும் சுற்றுப்புற மாவட்டப் பகுதிகளில் ஷவ்வால் பிறை தென்படாத காரணத்தால் வியாழக்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாப்படும் என ஹிலால் கமிட்டித் தலைவரும் மாவட்ட அரசு ஹாஜியுமான க. ஜலீல்சுல்தான் தெரிவித்துள்ளாா்.
திருச்சியில் ஷவ்வால் பிறை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஹிலால் கமிட்டித் தலைவரும், மாவட்ட அரசு ஹாஜியுமான க. ஜலீல் சுல்தான் தலைமை வகித்தாா். ஹிலால் கமிட்டி உறுப்பினா்கள் ஏ. முகமது ரூஹில்ஹக், நெளஷாத் என்கிற பஷிா்பாய், ஏகே. உசேன், எம் ஷேக்தாவூத் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலை ஷவ்வால் பிறை தென்படாத காரணத்தால், திருச்சி மற்றும் திருச்சி சுற்றுப்புற மாவட்டப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்.11) முதல்பிறை ஆரம்பமாகும். எனவே அன்றைய தினம் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது என மாவட்ட அரசு ஹாஜி தெரிவித்துள்ளாா்.

Tags

Next Story