ரமலான் சிறப்பு தொழுகை : 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ரமலான் சிறப்பு தொழுகை : 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சிறப்பு தொழுகை 

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி கோரிமேடு ஈத்கா மைதானத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்
நத்தம் தெற்குத் தெரு தொழுகை பள்ளிவாசலிலிருந்து தக்பீர் ஓதி ஜமாத்தாக புறப்பட்டு பெரிய பள்ளிவாசல், மேலத்தெரு பள்ளிவாசல் சென்று அங்குள்ள ஜமாத்தார்களும் இணைந்து நத்தம் கோவில்பட்டியில் உள்ள கோரிமேடு ஈத்கா மைதானத்தை சென்றடைந்தனர். அங்கு சிறப்புத் தொழுகை நடந்தது. இதற்கு ஹஜ்ரத் முகமது இக்பால் இமாமாக முன்னின்று தொழுகை நடத்தினார்.முன்னதாக ஹஜ்ரத் முகமது ஹனிபா ரமலான் மாதத்தின் சிறப்பு குறித்து மார்க்க விளக்க உரையாற்றினார். பின்னர் ஹஜ்ரத் முகமது யாசின் குத்பா ஓதினார். தொடர்ந்து உலக நன்மை வேண்டி பிரார்த்தனை மேற்கொண்டனர்.இதில் நத்தம், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஜமாத்தார்கள் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story