ராமநாதபுரம்: மாணவருக்கு குவியும் பாராட்டுக்கள்

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த ராமநாதபுரம் மாவட்ட மாணவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வி.வி.ஆர்.நகரை சேர்ந்த சேசுராஜா என்பவரின் மகன் சாம்கமலேசன் சாயல்குடி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள இவர் முத்துராஜா தலைமையில் இயங்கும் ஷோபுக்காய் கோஜுரியு கராத்தே பள்ளியில் பயிற்சி பெற்று வந்தார்.

இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

சர்வதேச போட்டியில் பங்கேற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மாணவர் சாம்கமலேசனை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டிவருகிறார்கள்

Tags

Next Story