ராமநாதபுரம் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரம் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் வருகின்ற ஜுன்4-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணி நடைபெறவிருப்பததால் அதிமுக சார்பில் கலந்துக்கொள்ளவிருக்கும் முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் ராமநாதபுரம் நகரில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது. ஆலோசனைக்கூட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ முனியசாமி தலைமை வகித்தார்.இந்த ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசும்போது அண்ணா திமுகவை போல் மிகப்பெரிய வெற்றியை பெற்ற கட்சியும் இல்லை வெற்றி வாய்ப்பை இழந்த கட்சியும் இல்லை என்பதை தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வெற்றி எப்படி இருந்தாலும் கடைசி வரை இருந்து அனைத்து வாக்குகளையும் குறிப்பிட்டு வர வேண்டும் அதற்கான பயிற்சியை மூன்றாம் தேதி மாவட்ட செயலாளர் போதுமான பயிற்சி தனியார் மகாலில் வழங்குவார் என்றார். இக்கூட்டத்தில் ராமநாதபுரம் நகர் செயலாளர் பால்பாண்டி, மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருதுபாண்டியன், அவைத்தலைவர் சாமிநாதன், மற்றும் ஏராளமான நிர்வாகிகள் மாவட்ட முழுவதும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story