ராமநாதபுரம் : புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்

ராமநாதபுரம் :  புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்

பேருந்து சேவை துவக்கம் 

முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து சாயல்குடி வழியாக ராமநாதபுரம் செல்லும் புதிய பேருந்து வழித்தட சேவையை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் புதிய வழித்தடத்தில் முதுகுளத்தூரிலிருந்து சாயல்குடி வழியாக ராமநாதபுரம் செல்லும் பஸ் துவக்கவிழா மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமையில் காரைக்குடி மண்டல போக்கு வரத்து அலுவலர் சிங்காரவேல் முன்னிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கிவைத்தார்.விழாவில் மாவட்ட போக்குவரத்து அதிகாரி பத்மகுமார், மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி உதவி மக்கள் தொப்பு அலுவலரவிஜயகுமார், முதுகுளத்தூர் தாசில்தார் சடையாண்டி.ஆனையாளர் ஜானகி பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ், ஒன்றிய திமுக செயலாளர்கள் சண்முகம்,,கோவிந்தராஜ், பூபதி மனி, பேருராட்சி சேர்மன் ஷாஜகான் , ஆறுமுகம்,குலாம்முகைதீன், மற்றும் செல்லமணி, பாலக் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story