ராமநாதபுரம் : சிறுவர் பள்ளியில் பட்டமளிப்பு விழா

ராமநாதபுரம் : சிறுவர் பள்ளியில் பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா 

ராமநாதபுரம்கீழக்கரை அல் மனார் சிறுவர்கள் மதரசா பள்ளியில்11ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மேலத்தெரு ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் .மதரசாவில் குர்ஆன், ஹதீஸ் மனனம் செய்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவை அஹ்மது தெரு பொது நல சங்கம் தலைவர் ஏ.சுல்தான், அஹ்மது தெரு பொது நல சங்கம் அமீரக தலைவர் ஹமீது கான் ஆகியோர் தலைமை தாங்கினர்.சங்கத்தின் முன்னாள் தலைவர் ஹாஜா நஜ்முதீன்,ஏரோ இபுனு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்கத்தின் துணைத் தலைவர் கமருஸ்சமான் வரவேற்றார்.மேலப்பாளையம் பஹ்ருல் உலூம் மற்றும் பைளூர் ரஹ்மான் அரபிக் கல்லூரி தலைவர் முகமது முஸ்தபா மஹ்லரி, முகமது சதக் பொறியியல் கல்லூரி பேராசிரியர் அஹமது ஹுசைன் ஆசிப் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

கீழக்கரை புதுப்பள்ளி கத்தீப் முஹம்மது மன்சூர் அலி ஆலிம் நூரி,நிஹ்மத்துல்லா ஆலிம், கலீல் ரஹ்மான் ஆலிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்கத்தின் செயலாளர் நைனா முகமது சாஹிப் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் துணை செயலாளர் ஏ.எஸ்.கபார்கான் செய்திருந்தார்.ஹமீதியா மேலத்தெரு புதுப்பள்ளி ஜமாத் தலைவர் முஜீப்,கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹானாஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கீழக்கரை ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Next Story