திடீரென ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட முதியோர்..!

.ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதரவற்ற முதியோர்களால் பரபரப்பு.

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர்,ஆவரந்தை,அரசரணிக்கரை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியோர்கள் என 100க்கும் மேற்பட்டோருக்கு குடியிருக்க வீடு இல்லாமல் ஆதரிக்க யாரும் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் அநாதையாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு குடியிருக்க வீட்டுமனை நிலமும் பட்டா கேட்டு பல ஆண்டுகளாக அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கையாக மனு அளிக்கப்பட்டது. நேரில் புகார் செய்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர்கள், ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்துள்ளனர். உடனே அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடி நடவடிக்கை எடுத்து தங்களுக்கு நிலமும் பட்டாவும் வழங்க ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை அங்கிருந்து நகரப் போவதில்லை என்றும் வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Tags

Next Story