ராமநாதபுரம் : எஸ்பிஐ வங்கியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தேர்தல் பத்திரம் மூலமாக பிஜேபிக்கு நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களைத் தர மறுக்கும் பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாகத்தை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆளும் பாஜக பெற்ற கோடிக்கணக்கான ரூபாய்க்கான நன்கொடைகள் குறித்த விபரங்களை உச்சநீதிமன்றத்தில் 06.03.2024க்குள் வழங்க வேண்டும் என்ற உத்தரவை ஏற்காமல், மேலும் நான்கு மாத கால அவகாசம் கேட்கும் பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து இராமநாதபுரம் சாலைத்தெரு பாரத ஸ்டேட் வங்கியின் முன்பாக இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பொறுப்புக்குழு தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் தெய்வேந்திரன், கோட்டை முத்து, ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ராமலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் மாவட்ட நிர்வாகிகள், வட்டார, நகர தலைவர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் காங்கிரஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர். நகர் தலைவர் கோபி நன்றி கூறினார்.மாவட்ட செய்தி தொடர்பாளர் கிரீன் இப்ராஹிம் கண்டன முழக்கம் எழுப்பினார்

Tags

Next Story