ராமநாதபுரம் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்

ராமநாதபுரம் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

ராமநாதபுரம் கடலாடியில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் வட்டாட்சியர் ரெங்கராஜ் தலைமையிலும் , ஊரக வாழ்வாதார திட்ட மேலாளர் செந்தில்வேல் முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி தேவர் சிலை பேருந்து நிலையம் மெயின் பஜார் வழியாக சென்ற பேரணியில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோஷங்கள் எழுப்பி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க பணியாளர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் சிவகுமாரன் மகேந்திரகுமார் பாலமுருகன் கேசவன் மற்றும் மகளிர் திட்ட கணக்காளர்கள் சுய உதவி குழு பயிற்றுநர்கள் சமுதாய வள பயிற்றுநர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story