ராமநாதபுரம் : மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் : மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

தமிழ்நாடு மின்சார வாரியத்தை மூன்றாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தை மூன்றாக பிரிக்கும் செயலுக்கு தமிழக முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் தலைமை அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தொழிற்சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் மின்சார ஊழியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர் தமிழ்நாடு மின்சார வாரியத்தை மூன்றாக பிரித்தால் நிர்வாக சீர்கேடுகள் அதிகரிக்கும் தொழிலாளர்கள் விரக்தி நிலையை ஏற்படுத்தும் பல்வேறு அவல நிலைக்கு மின்சார வாரியம் தள்ளப்படும் என்று கண்டன கோஷத்தில் மின்சார ஊழியர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story