ராமநாதபுரம் எஸ் டி பி ஐ சார்பில் உழவர் திருவிழா

ராமநாதபுரம் திருப்புல்லாணியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் உழவர் திருநாள் கொண்டாட்டம் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் இல்லத்தில் உழவர் திருநாாளை முன்னிட்டு பொங்கல் வைத்து கேக் வெட்டி கொண்டாடினர். எஸ்டிபிஐ கட்சி மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது, மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் MKE.உமர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் எஸ் டி பி ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கீழை ஜஹாங்கீர் அரூசி மாவட்ட பொது செயலாளர் அப்துல் ஜமீல், பொருளாளர் ஹசன் அலி, மாவட்டத் துணைத் தலைவர் சோமு, முன்னாள் மாவட்ட தலைவர் அப்துல் வஹாப், தொழில் சங்க மாவட்ட செயலாளர் இஜாஸ், மாவட்ட பொருளாளர் முஸ்தாக், கிழக்கு ஒன்றிய செயலாளர் பீர்முகைதீன், இராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அக்பர் அலி, கீழக்கரை நகர் செயலாளர் காதர், ரீகான், பக்ருதீன், தாஜூல் அமீன்,சாதிக் அலி, மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கீழக்கரை முன்னாள் நகர் தலைவர் ஹமீது பைசல் நன்றி கூறினார்.

Tags

Next Story