ராமநாதபுரம்: டிச.29ல் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் - ஆட்சியர் அறிவிப்பு

ராமநாதபுரம்: டிச.29ல் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் -  ஆட்சியர் அறிவிப்பு

விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் - ஆட்சியர் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் விஷ்ணுசந்திரன் அறிவிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் ௨௯ம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் இந்தக் கூட்டம் நடைபெறும் எனவும், குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை விவாதிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags

Next Story