மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்

ராமநாதபுரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் காங்கேசன் கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து இரண்டு படகையும் அதிலிருந்து 23 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதனை அடுத்து 23 மீனவர்களையும் படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதினால் மீன்பிடி துறைமுகத்தில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நாள் ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் மீன்பிடி தொழிலை சார்ந்த தொழிலாளர்கள் சுமார் 5000 க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story