ராமநாதபுரம் : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

ராமேஸ்வரம் கடல் பகுதியில் பலமான காற்று வீசுவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்களுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.
மன்னார்வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் 45 முதல் 55 கிலோமீட்டர் வரை வீசப்படும் என வானிலை அறிவிப்பை தொடர்ந்து ராமேஸ்வரம் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீனவர்கள் தங்களது உடமைகளை பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்ளுமாறு ராமேஸ்வரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அறிவிப்பு.

Tags

Next Story