ராமநாதபுரம் : தென்மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு

ராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு பல லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
வடகிழக்குப் பருவமழையால் நெல்லை,தூத்துக்குடி,கன்னியாகுமாரி,தென்காசி மாவட்டங்கள் வரலாறு காணாத வகையில் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் 42 லட்சம் மதிப்பிலான அரிசி,பருப்பு,எண்ணை,நாப்கீன்,மளிகை பொருட்கள் தண்ணீர் பாட்டில்கள் என 21 வகையாக நிவாரணப் பொருட்கள் அடங்கி தொகுப்பு லாரிகள் மூலம் வெள்ளம் பாதித்த தென்மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கழக செயலாளரும் ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story