ராமநாதபுரம் ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு

ராமநாதபுரம் பரமக்குடி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராமநாதபுரம் பரமக்குடி அருகே எம் நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து காஷ்மீரில் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார் இந்நிலையில் ராணுவத்தில் ஓய்வு பெற்று சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எம் நெடுங்குளத்திற்கு வருகை தந்த‌ போது சொந்த கிராம மக்கள் பட்டாசு வெடித்து மேல தாளங்கள் முழங்க பாலமுருகனுக்கு பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர் இந்நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள் உறவின் முறையினர் பலர் இருந்தனர்

Tags

Next Story