ராமநாதபுரம் உள்வாங்கிய கடல்

ராமநாதபுரம் அக்னி தீர்த்தம் மற்றும் சங்குமால் கடற்கரை பகுதி வழக்கத்தை விட உள்வாங்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை வழக்கத்திற்கு மாறாக 100 மீட்டர் தூரம் வரை கடல் உள்ளவாங்கியுள்ளது.இதனால் பக்தர்கள் புனித நீராட முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதேபோல் ஓலைக்குடா, சங்குமால் கடற்கரை பகுதியில் கடல் உள்ளவாங்கியுள்ளதால் கடற்கரை ஓரம் உள்ள பவளப் பாறைகள் மற்றும் கடற்கரையோரங்களில் வசிக்கக்கூடிய கடல்வாழ் உயிரினங்களான நட்சத்திர மீன், சிப்பி, சங்கு உள்ளிட்டவைகள் வெளியே தெரிந்து வருகிறது.

இது வழக்கமான ஒன்று தான் எனவும் பகல் நேரத்தில் நீரோட்டம் மாறியவுடன் கடல் இயல்பு நிலைக்கு திரும்பும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் தனுஸ்கோடி, அரிச்சல்முiனை, பாம்பன், சேரங்ககோட்டை உள்ளிட்ட வடக்கு மற்றும் தெற்கு கடல் பகுதியில் கடல் சற்று சீற்றமாக உள்ள நிலையில் ஓலைக்குடா, சங்குமால், அக்னிதீர்த்தம், கடல் உள்ளவாங்கியுள்ளது மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுனாமிக்கு பின் கடலில் அடிக்கடி நிகழும் மாற்றங்கள் குறித்து கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடல் உள்வாங்கியது குறித்து கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் கேட்கும் போது இது ஒரு இயல்பான ஒன்று. கடல்; காற்றின் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டால் கடற்கரை கடல் நீர் உள்வாங்குவது வழக்கம். அதனால் தான் காலை நேரம்; கடல் உள்வாங்கி உள்ளது. அதே போல் பகல் நேரங்களில் காற்றின் வேகம் மாறும் பட்சத்தில் மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு திரும்பும். இது குறித்து மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்தனர்.

Tags

Next Story