ராமநாதபுரம் அதிமுக சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம்

பரமக்குடியில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க கோரி அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அதிமுக சார்பில் போதைப்பொருள் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்தில் 500கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திமுக அரசை கண்டித்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அதிமுக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம். ஏ. முனியசாமி தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். மாநில மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். மேலும் பரமக்குடி மற்றும் ஒன்றிய கழகத்தில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மனித சங்கிலியாக பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து சந்தை கடை வரை கைகோர்த்து நின்று திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர், மேலும் போதை பொருளை தடை செய் என்ற பதார்த்தைகளையும் ஏந்தி திமுக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

Tags

Next Story