ராமநாதபுரம் : மர்ம மரணம் -போலீஸ் விசாரணை

ராமநாதபுரம் : மர்ம மரணம் -போலீஸ் விசாரணை

மர்ம மரணம் 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சின்ன கீரமங்கலத்தில் தனியார் கட்டிடத்தின் வாசலில் சுமார் 48 வயது மதிக்க ஒரு நபர் இறந்து கிடப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. காவல் நிலைய ஆய்வாளர் மூர்த்தி தனி பிரிவு காவலர் அருண் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்வதில் இறந்த நபர் மேல்பனையூர் கிராமத்தைச் சேர்ந்த சேஷாத்திரி மகன் சுரேஷ் (48) என்பதும் இவருக்கு திருமணம் ஆகி 20 வருடங்களுக்கு மேலான நிலையில் மனைவி குழந்தைகளை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.சமீபகாலமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுஇருந்து வந்த நிலையில் இரவு சின்னக்கீரமங்கலத்தில் ஊராட்சி மன்றம் அலுவலகம் எதிரில் உள்ள கட்டிடத்தில் படுத்து இருந்தவர் மர்மமான முறையில் இறந்து போனார்.உடன் பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் பிணக்கூறு ஆய்விற்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவரது சாவில் வேறு ஏதேனும் மர்மம் உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story