ராமநாதபுரம் ஊராட்சி செயலாளர்களுக்கு கை துப்பாக்கி வழங்க வேண்டும்

தமிழகம் முழுவதும் ஊராட்சி செயலாளர்களுக்கு கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என ஊராட்சி செயலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆனந்தூர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருபவர் செய்யது அபுதாகிர் இவரை கடந்த 15 ஆம் தேதி மூன்று பேர் கொண்ட கும்பல் அலுவலகத்தில் புகுந்து கடுமையாக கொலை வெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்து தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் நாகேந்திரன் தலைமை வகித்தார் மாநில பொதுச்செயலாளர் வேல்முருகன் கண்டன உரை ஆற்றும் போது பேசுகையில் ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கருதி கைத் துப்பாக்கி வழங்க வேண்டும் என மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார், மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் கண்டன உரை ஆற்றினார் மாநில பொருளாளர் மகேஸ்வரன் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முருகன் மாவட்ட பொருளாளர் செந்தில் பொன் குமார் ஆர் எஸ் மங்கலம் ஒன்றிய தலைவர் சிலம்பரசன் சிவகங்கை மாவட்ட தலைவர் பாக்கியராஜ் மற்றும் விருதுநகர் மாவட்ட தலைவர் கணேசன் பாண்டியன் தூத்துக்குடி மாவட்ட தலைவர் கற்குவேல் மதுரை மாவட்ட தலைவர் கணேசன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story