ராமநாதபுரம் துணை ராணுவப்படை அணி வகுப்பு

ராமநாதபுரம் துணை ராணுவப்படை அணி வகுப்பு

அணி வகுப்பு 

ராமநாதபுரம் துணை ராணுவப்படை அணிவகுப்பில் எஸ் பி பங்கேற்றார்.

ராமநாதபுரம் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக நடைபெற உள்ளதையொன்று தேர்தல் ஆணையத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் தேர்தலில் வாக்களிப்பது குறித்த ஒத்தியை நிகழ்வுகள் மற்றும் பாதுகாப்பு அணிவிப்பானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் நேர்மையாக அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு ஒத்திகையானது ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

குமரய்யா கோயிலில் தொடங்கி நகரின் முக்கிய பகுதியில் வலம் வந்து நிறைவடைந்தது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் தலைமையில் துணை ராணுவ படையினர் மட்டுமின்றி உள்ளூர் போலீசாரம் கலந்துகொண்டு நெடுக்கான அணிவகுப்பை நடத்தி முடித்தனர்.

Tags

Next Story