ராமநாதபுரம் : மக்கள் கோரிக்கை

ராமநாதபுரம் : மக்கள் கோரிக்கை

ராமநாதபுரம் : மக்கள் கோரிக்கை

நியாயவிலை கட்டிட பணி முடிந்து பல மாதங்கள் ஆகியும்மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் உள்ள கட்டிவயல் ஊராட்சிக்குட்பட்ட எட்டுகுடி கிராமத்தில் மக்களின் பயன்பாட்டிற்காக திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரு. மாணிக்கம் அவர்கள் நிதியிலிருந்து ரூ.10.00 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலை கட்டிடம் கடந்த சுமார் ஏழு மாதங்களுக்கு முன் கட்டிமுடிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை மக்கள் பயன்பாட்டிற்கு ஏனோ வரவில்லை. பயன்பாட்டிற்கு வராத நிலையில் கட்டிடம் சேதம் அடையவும் வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட பொழுது கட்டிடதிற்கு மின் இணைப்பு வழங்க கால தாமதம் ஆகிறது என ஒரு மழுப்பான பதிலையே கூறுகின்றனர். எனவே மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story