ராமநாதபுரம் வாக்கு சேகரிப்பு எதிர்ப்பு

ராமநாதபுரம் வாக்கு சேகரிப்பு எதிர்ப்பு

வாக்கு சேகரிப்பு எதிர்ப்பு

நயினார்கோவில் அருகே கருணாசு தேர்தல் பிரச்சாரத்திற்கு கடும் எதிர்ப்பு.
ராமநாதபுரம் நயினார்கோவில் அருகே திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாசுக்கு இளைஞர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் நவாஸ் கனியை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் நயினார் கோவில், கொடிக்குளம், கொட்டகுடி, அக்கிரமேசி ஆகிய கிராம பகுதிகளில் நேற்று பிரச்சாரம் செய்தார். அக்கிரமேசி கிராமத்தில் மேடையில் கருணாஸ் பேசியதாவது, ராமநாதபுரம் பகுதியில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படைக்கு ஏராளமான இளைஞர்கள் சென்ற நிலையில், தற்போது நாட்டை சர்வாதிகாரமாக மாற்ற சிலர் வழிவகை செய்கின்றனர். டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிட்ட முதல்வர்களை கைது செய்துள்ளனர். ஜெயலலிதா இருந்தபோது மோடியா, லேடியா என்றார். அப்போது ஒரு பெண்ணுக்கு இருந்த தைரியம் தற்போதுள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமிக்கு எங்கு சென்றது. நானும் ஓட்டு போட்டு தான் பழனிச்சாமி முதல்வர் ஆனார். இந்நிலையில் அங்கு இருந்த இளைஞர்களில் ஒருவர் கூவத்தூரில் நீங்களும் தானே பழனிச்சாமிக்கு ஓட்டு போட்டீர்கள் என்றார். அங்கிருந்த திமுகவினர் அந்த இளைஞருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு சலசலப்பும், பதட்டமும் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் அந்த இளைஞரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து பேசிய கருணாஸ், 127 சட்டப்பேரவை உறுப்பினர்களும் வாக்களித்தது பழனிச்சாமிக்காக அல்ல சசிகலாவுக்காகத் தான். இதையெல்லாம் கூறுவதற்கு பழனிச்சாமி தயாரா?. மேலும் கோடநாடு ஜெயலலிதாவின் இடம் தான். அதில் சசிகலாவுக்கும் பங்கு உண்டு. ஆனால் அங்கு நடந்த கொலைகளுக்கு எல்லாம் யார் காரணம் என கண்டுபிடித்தார்களா என கேள்வி எழுப்பினார்.

Tags

Next Story